தேவையான பொருட்கள் :
- பிரியாணி போடுகிற பட்டை நன்றாக அரைத்து தூள் செய்து வைக்கவும்
- தேன்,முடிந்த அளவு கடைகளில் வாங்குவதை தவிர்த்து,கிராமங்களில் உள்ளவர்களிடம் சொல்லி வைத்து வாங்கவும்
- எலுமிச்சை
செய்முறை :
- இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து ,நன்றாக கொதித்தவுடன் பட்டை பொடியை அதில் போடவும்
- ஒரு 2 நிமிடம் கழித்து பாத்திரத்தை இறக்கி அதில் ஒரு முழு எலுமிச்சை பிழிந்து விடவும்.ஒரு ஸ்புன் தேன் சேர்க்கவும் .
- தண்ணீர் குடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் ஒரு டம்பளர் குடிக்கவும் மற்றோரு டம்ளர் நீரை இரவில் தூங்க போகும் முன் குடிக்கவும் இரவு குடிக்கும் முன் லேசாக சூடு செய்து கொள்ளவும் .
- குறிப்பு :இரவு குடிக்க தனியாக வைக்கும் நீரை பிரிஜ்ஜில் வைக்க கூடாது
இதை முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
No comments:
Post a Comment